ஸ்ரீநகர், ஜன. 7 - ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலையை பாதுகாக்க முடியாத ஒன்றிய பாஜக அரசு, தற்போது, சமூகங்க ளுக்கு இடையே பிளவை உருவாக்குவோரின் கைக ளில் ஆயுதங்களை வழங்கி வருவதாக, முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரு மான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். அனந்தநாக் மாவட்டத்தில் அளித்த பேட்டி யின்போது, இதுதொடர்பாக மெகபூபா முப்தி மேலும் கூறியிருப்பதாவது: 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு - காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது என்று பாஜக கூறிவந்தது. ஆனால், ரஜோரி தாக்குதலை அடுத்து ‘கிராம பாதுகாப்புக் குழு’க்க ளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கும் நடவடிக்கை, பாஜக கூறியது பொய் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. ஜம்மு - காஷ்மீருக்குள் அதிக பாதுகாப்புப் படையி னரை ஏன் கொண்டுவர வேண்டும்? உள்ளூர் மக்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்? இது நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.
அரசியல் தீர்வு தேவை
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு தேவை. இதை ராணுவ ரீதியாகத் தீர்க்க முடியாது. பூமியில் எந்த சக்தியாலும் தனது சொந்த மக்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற முடியாது. ஜம்மு - காஷ்மீர் ஏற்கனவே ராணுவ கண்டோன் மெண்ட்; இங்கு ராணுவத்துக்குப் பஞ்சம் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக ஜனநாயக முறை மீட்டெ டுக்கப்பட்டு, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்படும் அள வுக்கு ராணுவம் தனது கடமைகளை சிறப்பாகச் செய்துள்ளது. ஆனால் இப்போது ராணுவத்திற்கு வேலையில்லை. லடாக்கில் அண்டை நாடு ஆக்கிரமிப்புச் செயல் களைச் செய்த பின்னரும், பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்கத்தில் அரசாங்கம் ஈடுபடுகிறது. அவ்வாறி ருக்கையில் காஷ்மீருக்கு மட்டும் ராணுவ நடவ டிக்கை எவ்வாறு தீர்வாக இருக்க முடியும்? ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலையை பாதுகாக்க முடியாத ஒன்றிய பாஜக அரசு, தற்போது, சமூகங்க ளுக்கு இடையே பிளவை உரு வாக்குவோரின் கைகளில் ஆயுதங்க ளை வழங்கி வருகிறது. உள்ளூர் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கு வது, பயம், சந்தேகம் மற்றும் வெறுப்புச் சூழலை உருவாக்கும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்கு உத வுவதாக மட்டுமே இருக்கும். இது ஒரு சமூகத்தை மற்ற சமூகத்துடன் மோத வைக்கும் நடவடிக்கையாகும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
மெகபூபா எழுப்பிய கேள்வியின் பின்னணி என்ன?
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-ஆவது பிரிவுதான், காஷ்மீர் தீவிரவாதத்திற்குக் காரணம் என்று பாஜக கூறி வந்தது. இதைச் சொல்லியே 2019-ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, மாநில அந்தஸ்தையும் பறித்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. எனினும் அங்கு ஜன நாயக அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவில்லை. துணைநிலை ஆளுநரின் ஆட்சி என்ற பெயரில், ஒன்றிய பாஜக அரசே ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 3 ஆண்டுகளில் தீவிரவாத சம்பவங்கள் குறைந்து விட்டதாக பாஜக தலைவர்கள் கூறிக்கொண்டாலும், அது முன்பை விட அதிகரித்து இருக்கிறது. இந்த உண்மையை மோடி அரசு ஏற்பதாக இல்லை. இந்நிலையில், 2023-ஆம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 அன்று மாலை 7 மணியளவில் ரஜோரியில், காட்டுப் பகுதியிலிருந்து துப்பாக்கி களுடன் வந்த இரண்டு பயங்கரவாதிகள் மூன்று வீடு களுக்குள் புகுந்து, நான்கு அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்தனர். முதலில் அப்பர் டாங்ரியில் ஒரு வீட்டில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், 25 மீட்டர் தூரம் சென்று, அங்கி ருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இன்னொரு வீட்டில் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில், 10 பேர் உடல்களில் குண்டுகள் பாய்ந்தன. அவர்கள், ரஜோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் வழியிலேயே உயிரிழந்து விட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் விமானம் மூலம் ஜம்மு-வுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கும் ஒருவர் உயிரிழந்தார். ஒட்டு மொத்தமாக 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரி ழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களுடன் போராட்டம்
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநராக இருக்கும் மனோஜ் சின்ஹா மற்றும் ஒன்றிய அரசின் நிர்வாகம் மீது ஜம்மு - காஷ்மீர் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். அவர்கள் தாக்குத லில் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்ய மறுத்து விட்டதுடன், அந்த உடல்களை பொது இடத்தில் வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்க ளை சந்திக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். அதன் படியே காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ராஜோரி மாவட்டத்துக்கு நேரில் சென்று கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரத்தில், இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சிவசேனா உள்ளிட்ட அமைப்பினரும் வெறியைத் தூண்டும் முயற்சியில் இறங்கினர். கடந்த 1990-ஆம் ஆண்டில் ஜம்மு-வின் செனாப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து போரா டுவதற்காக கிராமப் பாதுகாப்பு குழு அமைக்கப் பட்டது. இவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப் பட்டு, பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்பட்டது. அந்த துப்பாக்கிகளை திரும்பப் பெறாமல் இருந்தி ருந்தால், இந்த தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என்றும், ஆனால், 60 சதவிகித துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டு விட்டதாகவும் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் பேட்டியில் கூறினார். இதனிடையே போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீஸ் டிஜிபி திக்பால் சிங், ‘‘கிராம பாதுகாப்பு குழுக்களுக்கு இப்போது புத்துயிர் அளித்து, மீண்டும் ஆயுதம் வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளார். இந்தப் பின்னணியிலேயே, 370 ஆவது பிரிவு ரத்து மூலம் காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றால், ரஜோரி சம்பவம் எவ்வாறு நடந்தது, பொது மக்களின் கைகளில் ஆயுதங்களை வழங்க வேண்டிய தேவை என்ன? என்று மெகபூபா முப்தி கேட்டுள்ளார்.